பாசர்: அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை  4.9 ரிக்டர் அளவில்  மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பாசார் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில்  4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கத்தின் நடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது மற்றும் பாசரின் வடக்கு-வடமேற்கில் 148 இல் அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் வடமேற்கே 148 கி.மீ. தொலைவில் பசார் என்ற பகுதியில்  4.9 ரிக்டரில் நிலநடுக்கம்  பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.