டில்லி

னவரி 31 ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை அளிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த நீட் விலக்கு சம்பந்தமாகத் தமிழக எம்பிக்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச அனுமதி கேட்டபோது பலமுறை மறுத்துவிட்டார்.  அனைத்துக் கட்சியினரும் இது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்காக திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் காலை தனித்தனி விமானங்கள் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் டி.ஆர்.பாலு (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), ரவிக்குமார் (விசிகே), ஜி.கே மணி எம்எல்ஏ (பாமக) மற்றும் நவாஸ் கனி எம்.பி. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆவார்கள்.

இன்று மாலை 4.30 மணிக்கு இவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினர். இதன் பிறகு தமிழக அணைத்துக் கட்சி செய்தியாளர்களைச் சந்தித்தபோது “அமித்ஷாவிடம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தோம். அவர் சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார்.

மேலும் தமிழகம் கோரிய பேரிடர் நிதியை ஜன.31-க்குள் அனுப்பி வைப்பதாக அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.  பிறகு நாங்கள் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் அமித்ஷாவிடம் கூறினோம். முன்பு அமித்ஷா எங்களைச் சந்திக்க முடியாததற்கு வேலைப்பளுவே காரணம் என அவர் தெரிவித்தார்” எனக் கூறினார்கள்.