டெல்லி:
த்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று  விவசாயிகள்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள்,  விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள்  தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி தொடர்பான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

பொருளாதார மேம்பாட்டுக்கான ரூ.20 லட்சம் கோடி  சிறப்பு திட்டத்திற்கான முதல்கட்ட அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட அறிவிப்புகளை  வெளியிட்டு வருகிறார்.
நேற்றைய முதல்கட்ட அறிவிப்பில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது. குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது   2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார்.
இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 86 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான 63 லட்ச கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி, மே 31 ஆம் தேதி வரை தள்ளுபடி

நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிஷன் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்துவதன் மூலம், 2.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.