ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே, மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது.

கோப்பையை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையாக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், பாகிஸ்தானிடம் சமீபத்தில், அந்நாட்டில் மண்ணில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க தென்னாப்பிரிக்கா முயலும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தானும் எளிதில் விட்டுவிடுவதாய் இல்லை. இரண்டாவது போட்டியில், ஒருநாள் போட்டிகளில், சேஸிங்கின்போது, அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை(193) நிகழ்த்தினார் பாகிஸ்தானின் ஃபக்கர் ஸமான்.

இதற்கு முன்னர், சேஸிங்கின்போது, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் அடித்த 185 ரன்கள்தான், சேஸிங்கின்போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஸமான்.

இந்நிலையில், இன்று பிற்பகல் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இன்றும் ஏதேனும் உலக சாதனையை நிகழ்த்துவரா ஸமான் என்பது, பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.