புதுக்கோட்டை:  புதுக்கோட்டை வன்னியன்விடுதியில் நடைற்று வரும்  ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்றவை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சில நேரத்தில் எதிர்பாராத உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது.  திருச்சியில் உள்ள மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர் மாடுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்போன்று 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இதனைப்போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது சுமார் 37 பேர் மாடு முட்டியதில் படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கூலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 23 பேர், பார்வையாளர்கள் 2 பேர் காயமடைந்தனர்.