சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றும்,  10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,, மேலும் 14 மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்க அமைக்கும் நடவடிக்கை எடுககப்பட்டு உள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். அதில், பல்வேறு திட்டங்கள் குறித்த தகவ்லகள் வெளியாகி உள்ளது. அதன்படி,   அரசு பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழில் கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி, விடுதி மற்றும் போக்குவரத்து ஆகியற்வற்றுக்கான கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. இந்த முன்னோடி திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 36,419 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ் இந்திய அளவில் உள்ள முதல் 100 உயர் கல்வி நிறுவனங்களின் 17 நிறுவனங்கள் அமையப்பெற்று தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

பெருந்தலைவர் காாமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.909 மதிப்பீட்டில் அரசு பொறியியல் கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனைகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த அரசின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நமது மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உள்பட தொழில் நுட்ப துறையில் அரிய சாதனைகள் படைத்திட தமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ரூ.2172 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளஙக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழ்நாடு அரசு,  தொழில் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இதுவரையில் 1176 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 லட்சம். 2025ம் ஆண்டில் மட்டும் 14.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மின்னணுவியல் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தேசிய அளவில் மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.2 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. கலைஞரின் முயற்சியால் கடந்த 2000ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட டைடல் பூங்கா, தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கான உயரிய இடத்தை உறுதி செய்தது. அதே வழியில் இந்த அரசும் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ஒரு டைடல் பூங்காவையும், தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும் நிறுவியுள்ளது.

மேலும் மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், உதக மண்டலம், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த தொழில் பரவி நம் மாநிலம் சமச்சீரான வளர்ச்சியை எட்டும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சென்னையில் ரூ.83 கோடி மதிப்பில் நிதி நுட்ப மையம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 18 புதிய துறைசார் கொள்கைகளை இந்த அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநிலத்தின் மொத்த தொழில் சாலை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி முறை என்னும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் குறு, சிறு நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது. உலக புத்தொழில் மாநாடு, தொழில் பயிற்சி முகாம்கள் என பல முன்னெடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]