சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சென்றதாக  3 லட்சத்து 55ஆயிரத்த 603 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் , அபராதமாக ரூ.3 கோடியே 47லட்சம் வசூலாகி உள்ளதாக  தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஏராளமானோர் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சென்றதால், அவர்களை காவல்துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்தும், சிலரது வாகனங்களை பறிமுதல் செய்தும், அபராதம் வசூலித்தும் வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை  144 உத்தரவை மீறியதாக இதுவரை 3 இலட்சத்து 36 ஆயிரத்து 426வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

 3 இலட்சத்து 55 ஆயிரத்து 603 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர்

அதுபோல, வெளியே சுற்றிய 3,01,111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக   3 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 599 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது