மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் காவல்துறையினரும் அதிக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மேலும் 341 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அம் மாநில காவல்துறை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 15,294 ஆக உயர்ந்துள்ளது.

2 காவலர்கள் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உள்ளது. மாநிலத்தில் 12,306 காவலர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னமும், 2,832 காவலர்கள் மருத்துவமனையில் உள்ளனர்.