சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,  தமிழகத்தில் இன்று மேலும் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25,59,597 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி  26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  34,076 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில், தொற்றில் இருந்து 2,178 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் 20,716 ஆக உள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 1,60,171 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 3,74,46,148* ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், கோவை முதலிடத்தில் தொடர்கிறது. அங்கு  246 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக சென்னையில்  204 பேரும்,  ஈரோடு – 165, தஞ்சாவூர் – 124, செங்கல்பட்டு – 122 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.