துரகிரி

திடீரென சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 3000 பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. நேற்று இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாமி தரிசனம் செய்ய விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்காகப் பக்தர்கள் சாமி தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பிறகு அவர்கள் மலைப்பகுதி வழியாகக் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

நேற்று மாலை  மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீப்பற்றியது.  இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாகத் தண்ணீர் இல்லாததால் காட்டாறுகள், ஓடைகள் வறண்டு கிடந்து. செடி, கொடிகள் காய்ந்து இருந்ததால் காட்டுத்தீயானது வேகமாக பரவியது.

நேற்று அமாவாசை தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள்னெ. பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் சாப்டூர் வனச்சரகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.