டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,439 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.70 சதவிகிதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 5,439 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாக உள்ளது.

நேற்று மட்டும் 22,031 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,  இதுவரை கொரோனா பிடியில் இருந்து  மீண்டவர்களின் எண்ணிக்கை 4.38 கோடியாக உள்ளது. மொத்த பாதிப்பில், பலி விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் 65,732 பேர் உள்ளனர்.