டில்லி

ஓரின சேர்க்கையாளர்கள் இரு ஆண்களைக் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் படித்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர். வங்கதேச மாணவர் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர் என கூறப்படுகிறது. அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் ‘டேட்டிங்’ செயலியில் உறுப்பினர் ஆகி தனக்குப் பிடித்த ஒரு நபரை நண்பராக்கி அவர்கள் நெருக்கமாகி விட்டனர்.

வங்கதேச மாணவரின் நண்பர் ஒருவர் வங்க தேசத்தில் இருந்து டில்லி வந்து அவருடன் தங்கிக்கொண்டார். ஓரினச்சேர்க்கையில் அவரும் விருப்பம் கொண்டவர். வங்காள தேசத்துக்காரர்கள் 2 பேரும் டெல்லி சக்குர்பூர் பகுதியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வுக்கு இரவில் சென்றனர். அங்கிருந்து நள்ளிரவில் வீடு திரும்பியபோது வங்க தேச மாணவரின் ‘டேட்டிங்’ செயலி நண்பர் அங்கு வந்தார்.

வங்கதேசத்து மாணவரை அவர் உறவுக்கு அழைத்தார். அவருக்கு விருப்பம் இல்லாமல் போகவே, தன்னோடு வந்த தன் நண்பரை அனுப்பி வைத்தார்.  அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள பூங்காவின் புதருக்குள் சென்றனர். அங்கு ‘டேட்டிங்’ செயலி நபரின் நண்பர்கள் 4 பேர் அடுத்தடுத்து அங்கு வந்து 5 பேரும் சேர்ந்து வங்க தேசத்து மாணவர் மற்றும் வாலிபரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட 2 பேரும் தங்களது அறைக்கு வந்து பீகார் வாலிபரிடம் நடந்தவற்றைக் கூறினர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையிடம் புகார் செய்யப்பட்ஃபு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தது.  குற்றவாளிகளைப் பிடிக்க 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள 50 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தி சுர்ஜித் (வயது 21), தேவாசிஷ் வர்மா (20), ஆர்யன் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.