ணகுடி

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காரை மூடி உள்ளே விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிர் இழந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பாலர் பள்ளி தெருவை நாகராஜ் என்பவர் தனது மனைவி அருணா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று மதியம் இவர்களது குழந்தைகளான நித்திஷ் (7), நிதிஷா (5) ஆகியோரும், இதே பகுதியைச் சேர்ந்த சுதன்- தபிஷா தம்பதியின் குழந்தையான கபிசந்த்தும் (4) நாகராஜின் அண்ணன் மணிகண்டனின் காரை திறந்து உள்ளே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு நெடுநேரம் விளையாடிய பிறகு வெளியேற நினைத்த குழந்தைகளால் கதவைத் திறக்கத் தெரியவில்லை.  காருக்குள் மூச்சுத் திணறிய 3 குழந்தைகளும் காரிலேயே மயங்கி விழுந்தனர். பெற்றோர்கள் நீண்டநேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் பதறி பல்வேறு இடங்களில் தேடி காருக்குள் 3 குழந்தைகளும் மயங்கிக் கிடந்ததைக் கண்டுள்ளனர்.

கதி கலங்கிய அனைவரும் உடனடியாக கதவை திறந்து அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள், 3 குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பணகுடி காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றது.