சென்னை: 

மிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை  அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட  போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், 2வது கட்ட  போலியோ தடுப்பு சொட்டு  நாளை அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், நாளைய முகாமிலும் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.