சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 767 பேர் குணமடைந்தனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 730 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று இல்லை.  இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையில் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 625 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும்  69 அரசு ஆய்வகங்கள், 243 தனியார் ஆய்வகங்கள் என 312 ஆய்வகங்கள் உள்ளன. இன்று ஒரு நாளில் எடுக்கப் பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,00,252. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,32,38,152 ஆக உயர்நதுள்ளது.

இன்று மேலும் 730 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,26,197 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 440 பேர். பெண்கள் 290 பேர்.

இன்று 9பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  இவர்களில்  4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,472 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து, இன்று மேலும் 767 பேர் டிஸ்சார்ஜ்  ஆன நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 26,81,434 பேர்.

தற்போது சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை  8,291 பேர்.

கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 106 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து 2வது இடத்தில் சென்னை உள்ளது.  சென்னையில் 105 பேரும், ஈரோட்டில் 70 பேரும், திருப்பூரில் 62 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும், சேலத்தில் 49 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 105. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,57,921 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 1882. இன்று ஒருவரும் உயிரிழக்க வில்லை.   சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 8608 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 47 பேர் குணமடைந்ததுடன், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,48,131 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 2
செங்கல்பட்டு 51
சென்னை 105
கோவை 106
கடலூர் 7
தர்மபுரி 12
திண்டுக்கல் 5
ஈரோடு 70
கள்ளக்குறிச்சி 5
காஞ்சிபுரம் 19
கன்னியாகுமரி 11
கரூர் 16
கிருஷ்ணகிரி 10
மதுரை 7
மயிலாடுதுறை 1
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 44
நீலகிரி 16
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 3
சேலம் 49
சிவகங்கை 6
தென்காசி 0
தஞ்சாவூர் 16
தேனி 0
திருப்பத்தூர் 2
திருவள்ளூர் 26
திருவண்ணாமலை 6
திருவாரூர் 10
தூத்துக்குடி 4
திருநெல்வேலி 7
திருப்பூர் 62
திருச்சி 18
வேலூர் 14
விழுப்புரம் 5
விருதுநகர் 3