டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில்,  45பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும்  7,591 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,15,723 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 4.58% ஆக உள்ளது.

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84,931பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். * சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.19% ஆக  உள்ளது.

நேற்று மட்டும் மேலும் 45 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,799 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 9,206 பேர் குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,02,993 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.62% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24,70,330 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,11,91,05,738 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.