சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 740  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவலில் கோவை முதலிடத்தில் உள்ளது. சேலத்திலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

bty

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 8.00 மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று -1,01,030  கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை  5,39,68,345**சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும்  மேலும் 740  பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,24,73ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  11   பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந் தோர் மொத்த எண்ணிக்கை 36,454ஆக அதிகரித்துள்ளது.  இன்று மேலும் 765 பேர்  கொரோனா தொற்று சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,79,895 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 8,418  பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில்  கோவை மீண்டும் முதலிடத்தில் தொடர்கிறது.  கோயமுத்தூரில் இன்று 112 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 105 பேருக்கும், ஈரோட்டில் 68  பேருக்கும், செங்கல்பட்டில் 56  பேருக்கும், திருப்பூரில் 54 பேருக்கும்,  சேலத்தில் 53 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

மாநில தலைநகர் சென்னையில் இன்று 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,57,724ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 56
சென்னை 105
கோவை 112
கடலூர் 9
தர்மபுரி 7
திண்டுக்கல் 2
ஈரோடு 68
கள்ளக்குறிச்சி 2
காஞ்சிபுரம் 21
கன்னியாகுமரி 8
கரூர் 18
கிருஷ்ணகிரி 9
மதுரை 9
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 6
நாமக்கல் 47
நீலகிரி 16
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 5
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 1
சேலம் 53
சிவகங்கை 6
தென்காசி 1
தஞ்சாவூர் 18
தேனி 3
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 27
திருவண்ணாமலை 3
திருவாரூர் 8
தூத்துக்குடி 2
திருநெல்வேலி 7
திருப்பூர் 54
திருச்சி 18
வேலூர் 17
விழுப்புரம் 9
விருதுநகர் 2