ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன்  உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை  புரட்டி போட்டுள்ளதுடன், உலக பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றி விட்டது.இந்த தொற்று பரவத் தொடங்கி  ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது.  தற்போது டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பியா, அமெரிக்கா  நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தற்போதைய நிலையில், தடுப்பூசி மட்டுமே உள்ளது.  இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியை உலக

உலகம் முழுவதும் இதுவரை 245,254,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெருந்தொற்று காரணமாக 4,978,151 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 222,324,687  பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்  17,951,809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,876,694 (99.6%)  பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 75,115 (0.4%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன