டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும், 1,45,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மேலும் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,38,764 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும்,  57 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,167ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 20,742 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,67,571ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 1,45,026 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,37,235  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,02,79,61,722 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.