ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்3 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்பட இருக்கிறார். இதற்கான 26மணி நேர கவுண்டவுன் இன்று மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய 2 விண்கலங்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது. முதல் விண்கலமான சந்திரயான்1, கபடச்த  2008-ல்விண்ணில் செலுத்தியது.  இந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து,  கடந்த 2019ம் ஆண்டு, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்2 திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் 2 விண்கலம்  ஜுலை 2ந்தேதி விண்ணில் பறந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்த நிலவின் தென்துருவத்தை முழுமையாக ஆய்வு செய்யும் வகையில், சந்திரயான்3 திட்டத்தை தொடங்கியது. சுமார் ரூ.615 கோடியில்  அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான சந்திரயான்3 விண்கலம் தயார் செய்யப்பட்டது. இந்த விண்கலத்தில், ஏற்கனவே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாத வகையில் மிகவும் எச்சரிக்கையுடன் வடிவமைக்கப்பட்டு, ஒத்திகையும் பார்க்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

சந்திரயான்3 விண்கலத்தில், மூன்று முக்கிய பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. புரோபல்சன்(propulsion), லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான்2 விண்கலம் நாளை (ஜூலை 14)  மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், 24மணி நேர கவுண்டவுன் திட்டமிட்டபடி, இன்று (13ந்தேதி) மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது  என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….