சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மாநில தலைநகர் சென்னையில், இன்று 122 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  25,50,282 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானோர் மொத்த எண்ணிக்கை 33,937 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் நோயின் பாதிப்பில் இருந்த குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  24,93,583 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று 164 பேரும், ஈரோட்டில் 127 பேரும், சென்னையில் 122 பேரும், தஞ்சாவூரில் 103 பேரும், சேலத்தில் 102 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இன்று மேலும்  122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 53,72,49 ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் 2 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8312 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 172 பேர் குணமடைந்ததுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,74,35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 1502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 23
செங்கல்பட்டு 96
சென்னை 122
கோயம்புத்தூர் 164
கடலூர் 73
தர்மபுரி 29
திண்டுக்கல் 20
ஈரோடு 127
கள்ளக்குறிச்சி 40
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 28
கரூர் 11
கிருஷ்ணகிரி 31
மதுரை 21
மயிலாடுதுரை 18
நாகப்பட்டினம் 31
நாமக்கல் 48
நீலகிரி 58
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 34
ராமநாதபுரம் 11
ராணிப்பேட்டை 25
சேலம் 102
சிவகங்கை 20
தென்காசி 27
தஞ்சாவூர் 103
தேனி 11
திருப்பத்தூர் 26
திருவள்ளூர் 68
திருவண்ணாமலை 69
திருவாரூர் 22
தூத்துக்குடி 19
திருநெல்வேலி 24
திருப்பூர் 90
திருச்சி 63
வேலூர் 30
விழுப்புரம் 43
விருதுநகர் 19