சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 63 பேர் குணமடைந்து உள்ளனர். இன்றும் தொற்று பாதிப்பு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்முலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில்  யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

தற்போது தமிழகம்  முழுவதும் 4186 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.