டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,85,914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், மேலும் 665 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் மற்றும் குணமடைந்தோர் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூலம், மேலும், புதிதாக 2,85,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,85,116 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி மேலும்  665 பேர் இறந்துள்ளனர்.  இதன் மூலம், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,91,127ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,73,70,971 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.23% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்று காரணமாக  22,23,018 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.55% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,50,731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,63,58,44,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 17,69,745 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதுவரை  72,05,72,178*  மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.