யோத்தி

டந்த 11 நாட்களில் அயோத்தி ராமர் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த 11 நாட்களில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாகக் கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. பக்தர்களிடம் இருந்து காணிக்கை மற்றும் நன்கொடையாக இதுவரை ரூ.11½ கோடி கிடைத்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நன்கொடை பெட்டிகளில் இருந்து ரூ.8 கோடி ரொக்கமாகக் கிடைத்ததாகவும், காசோலை மற்றும் இணையம் மூலம் ரூ.3 கோடியே 50 லட்சம் கிடைத்ததாகவும் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறினார்.