சென்னை:  தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்க சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,55,572 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,635 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,02,833 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 35,476  ஆக உயர்ந்துள்ளத.

தற்போது மாநிலம் முழுவதும் 17,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 198 பேருக்கு  கொரோனா உறுதியாகி உள்ளது.தொடர்ந்து 2வது இடத்தில் சென்னை உள்ளது. சென்னையில் இன்று புதிதாக 194 பேரும்,  ஈரோடு மாவட்டத்தில் 121 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.