டெல்லி: 24/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 96,442 பேர் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றுகாலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி நேற்று புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,43,68,195 ஆக உள்ளது.

தற்போது சிகிச்சையில் 96,442 பேர் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும்  36 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,452ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 10,677 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,44,301ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,17,979  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,10,58,83,682 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.