சென்னை

மிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,64,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,51,217 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,07,54,711 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 7 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 31,64,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 46 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,264 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 24,639 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,20,457 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,06,484 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 6,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,98,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 17 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,832 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 7,418 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,37,042 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 52,742 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,786 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,742 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,91,412 பேர் பாதிக்கப்பட்டு 2,546 பேர் உயிர் இழந்து 2,64,074 பேர் குணம் அடைந்து தற்போது 24,791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,14,095 பேர் பாதிக்கப்பட்டு 2,587 பேர் உயிர் இழந்து 1,94,134 பேர் குணம் அடைந்து தற்போது 17,374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.