தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

32 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.

275 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

27 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏதும் இல்லை, செங்கல்பட்டு கன்னியாகுமரி, திருவாரூர், தூத்தூக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 23788 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.