சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  24,29,924 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், இதுவரை 23,37,209  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலனின்றி  31,386 பேர் உயிர் இழந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று புதிதாக  439  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சென்னையில் 5,29,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 25 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,071 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது.நேற்று 387 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,20,236 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.