சென்னை:  தமிழ்நாட்டில் நேற்று 1,661 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,47,041  ஆக உயர்ந்துள்ளது.  தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,984 ஆக உள்ளது. அதே வேளையில்  தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் மொத்த  எண்ணிக்கை 25,94,697 ஆக உயர்ந்துள்ளது.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று புதிதாக 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,47,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று யாரும் உயிரிழக்காத நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  8,449 ஆக உளளது. நேற்று   164 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,409 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: