சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) யார் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் காரணமாக, . கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போது மாநகராட்சி பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும்  27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாநகராட்சி  வரி விதிப்பு மற்றும் நிதிநிலைக் குழு தலைவர் சர்பஜெயதாஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.  இதையடுத்து, மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் கல்வி, சுகாதாரம், பூங்கா மேம்பாடு, விளையாட்டு திடல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மேயர் 67 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக கூறும் மாநகராட்சி அதிகாரிகள், இந்த ஆண்டு மேலும் பல மக்கள் நலப்பணிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் பேச இறுதியில் மேயர் பதில் உரை நிகழ்த்துவார்.