டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,557 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், மேலும்  2,603 பேர்  பலியாகி உள்ளனர். உயிரிழப்பு திடீரென உயர்நந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செயலில் உள்ள வழக்குகள் மொத்த தொற்றுநோய்களில் 0.33 சதவீதத்தை உள்ளடக்கியது, அதே நேரத்தில் தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.47 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயலில் உள்ள கோவிட்-19 கேஸ்லோடில் 24 மணி நேரத்தில் 563 வழக்குகள் குறைந்துள்ளன. தினசரி நேர்மறை விகிதம் 4.13% ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.64% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்ட உள்ளது அதன்படி, கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும்  20,557 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,45,654 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.

நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 2,603 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து 18,517 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  200.61 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 20,04,797 டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.