சென்னை,

ன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 1000க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர் ஆயுள்தண்டனை கைதிகள்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளி யிடப்பட்டது. இந்த ஆண்டு கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

தனித்தேர்வர்களாக 31,843 பேரும், சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.

இன்று வெளியான தேர்வு முடிவில்,புழல் மத்திய சிறைக்கைதி முத்துச்செல்வன் 1064 மதிப்பெண் பெற்றுள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறைக்கைதி முத்துராமலிங்கம் 1057 மதிப்பெண்ணும், திருச்சி மத்திய சிறைக்கைதி  செந்தில்குமார் 1052 மதிப்பெண்ணும் பெற்றது தெரிய வந்துள்ளது.

சிறையில் இருந்து படித்தே ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.