பாட்னா:

பீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில் சென்றார். நாஹ்சி கிராமம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.

இதில் 2 பேரும் பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் காரை தீயிட்டு எரித்தனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், இதன் பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது அலிக்கும், அவரது மகன் தப்ளூ ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது என்று நிருபரின் சகோதரர் ராஜேஷ் தெரிவித்தார்.

அந்த கார் அகமது அலிக்கு சொந்தமானது. அவர் நிருபருக்கு எதிராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.