ராமேஸ்வரம்:

ல்லெண்ண அடிப்படையில்  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 தமிழக மீனவர்களை இலங்கைஅரசு விடுதலை செய்தது. சமீபத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது.

கடந்த மாதம் 3-ந் தேதி நாகை, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்கள் விசைப்படகுகளில்,  கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக  இலங்கை கடற்படை அவர்களை கைது செய்த நிலையில், அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது.

அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 18 தமிழக மீனவர்களைளயும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து, இலங்கை  பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 18 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி நளினி உத்தரவிட்டார்.

விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாளில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.