சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழக நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி,  மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,43,683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35,310 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,581 பேர் குணமடைநத்நிலையில், இதுவரை 25,91,480 பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போதைய நிலையில் 16,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.