டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, நேற்று ஒரேநாளில், புதிதாக மேலும்  12,608 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 72 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,206ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக உள்ளது.

நேற்று மட்டும் 16,251 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,70,315ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,01,343 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,08,95,79,722 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.