சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு, 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காலக்கட்டமான  மே 14ந்தேதி அன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10,723 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,91,451ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா  சிகிச்சைப் பெற்று வந்த 42 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை  13,113ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில்  5925 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,07,947 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 70,391 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,08,155 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,11,87,630 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.