சென்னை: அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பிஎஸ்4 புதிய பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, சேலம் உள்பட 6 மண்டலடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி,  ‘பிஎஸ்-4’ ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன.  முதல்கட்டமாக  1,771 பிஎஸ் ரக பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

இந்த பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன. சேலம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், கோவை மண்டலத்திற்கு 115 பஸ்களும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், மதுரை மண்டலத்திற்கு 251 பஸ்களும், நெல்லை மண்டலத்திற்கு 50 பஸ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.