சென்னை,

போலீஸ் அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ பாலகிருஷ்ணன், சுதாகர், அஸ்வின் எம்.கோட்னீஸ், அமித்குமார் சிங், பிரதீப்குமார் உள்ளிட்டோர் டி.ஜ.ஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி, காமினி ஆகியோர் எஸ்.பி-.க்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.