சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்  என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

குரோம்பேட்டையில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து சார்பில்  பல்வேறு வழித்தடங்களில் செல்ல கூடுதலாக 17 பேருந்துகள் இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதல் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜாகண்ணப்பன் கொடியசைத்து பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் துவக்கி உள்ளோம், இன்று குரோம்பேட்டையில் இருந்து   17 வழித்தடங்களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்றார்.  அடுத்த மாதம் காஞ்சிபுரத்திலும் மக்கள் தேவைக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் ஓடி கொண்டு இருந்தது தற்போது 17,790 பேருந்துகள் தற்போது ஓடி கொண்டு இருப்பதாகவும்  61புள்ளி 6 சதவீதம் பெண்கள் தற்போது இலவச பயணம் மேற்கொள்கிறார்கள் என்றும்  கூறினார். இலவச பயணத்தால் 1450 கோடி ரூபாய் இழப்பை அரசு வழங்கி வருகிறது, போக்குவரத்து துறை தொடர்ந்து மக்கள் நலனுக்காக இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்  என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் தீபாவளி சுவீட் ஊழல் தொடர்பாகவும், தனியாருக்கு கொடுக்கவிருந்த ஆர்டர்களை முதல்வர்  ஸ்டாலின் கேன்செல் செய்து விட்டு, ஆவினில் வாங்க உததரவிட்டுள்ளது குறித்து கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், தீபாவளி பண்டிக்கைக்கான இனிப்பு கொள்முதலில் எந்தவித முறைகேடும் கிடையாது  என்று பதில் அளித்துடன், முதல்வர் உத்தரவின் பேரில் டெண்டர் ஆவினுக்கு கொடுக்கப்பட உள்ளது என கூறினார். மேலும், கடந்த  ஆட்சியில் 250 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட டெண்டர் தற்போது 178 ரூபாய்க்கு வழங்க உள்ளது, இதில்  முறைகேடு செய்வதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.