டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 8,813 பேர் பாதித்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 4.15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,27,098 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 20, 018 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4.36,38.844

தற்போது நாடு முழுவதும் 1,11,252 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை  2,08,31,62,694 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.