டெல்லி:  15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.‘

நிதி ஆணையம் (Finance Commission) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280-இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய்களைப் பகிர்வதற்கும், மாநிலங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குகிறது, மேலும் இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

இதுமட்டுமின்றி, மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு எவ்வளவு பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பது. மாநிலங்களின் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மானியங்களை (Grants-in-aid) பரிந்துரைப்பது. மேலும்,  உள்ளாட்சி அமைப்புகளின் நிதி: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது உள்பட பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பதினைந்தாம் நிதி ஆணையத்தின் மானியத் திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது. அதன்படி,  2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், மாநிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிராம பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக் கான மானியத் தொகைகளை பயன்படுத்துவதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளின்படி, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் அனைத்து கட்டாய தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றன.

இந்த விவரங்கள் 14.07.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2014-15-ம் நிதியாண்டு முதல் 2019-20-ம் நிதியாண்டு வரை, தமிழ்நாட்டிற்கு 15-வது நிதி ஆணையத்தின் கீழ் 8,777.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]