ஸ்லாமாபாத்

ரே நாளில் பாகிஸ்தானில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய்ப் பாதிப்பு பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இதுவரை 1,511 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர்.

நேற்று ஒருநாள் மட்டும் பாகிஸ்தானில் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது. பாகிஸ்தானில் நேற்று காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ராவல்பிண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 70 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அந்நாட்டில் பலர் நோயின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் வீடுகளிலிருந்து கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.