டில்லி
கடும் பனி காரணமாக டில்லியில் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 28 ரெயில்கள் தாமதம் ஆகி உள்ளன.
வட இந்தியா முழுவதுமே தற்போது அதிகாலை வேளைகளில் கடும் பனி மூட்டம் உள்ளது. டில்லியில் குளிரும் கடுமையாக உள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே விடிந்த பிறகும் வாகனங்கள் செல்கின்றன. பல இடங்களில் சிறிய வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பனி மூட்டம் ரெயில்களையும் விட்டு வைக்கவில்லை. கடும் பனி மூட்டத்தை ஒட்டி 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 28 ரெயில்கள் தாமதமாக வந்துக் கொண்டிருக்கின்றன. 9 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.