டில்லி,

காத்மா காந்தியின் 149-வது பிறந்த நாளையொட்டி டில்லியில் உள்ள  காந்தி  நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டில்லி  ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காந்தி நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து  பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பல தலைவரிகள் மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்களும் மரியாதை செலுத்தினார்.