டெல்லி: நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுசூழல்துறை  தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் கொரோனா மருத்துவக்கழிவுகள் என்ன செய்யப்படுகிறது,  எவ்வாறு அகற்றப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு  மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மூலம் தினமும் 146 டன் மருத்துவ கழிவுகள் உருவாக வருகின்றன.  அவைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டமான கடந்த 2020-ம் ஆண்டு  நாள் ஒன்றுக்கு சுமார்  616 டன் கழிவுகள் உருவானதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்தக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்வதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. மருத்துவக் கழிவு நிர்வாகவிதிகள் 2016-ன்படி, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகள், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாகஅகற்றுவது மற்றும் சுத்திகரிப் பதற்கான கட்டமைப்புக ளை உருவாக்க வேண்டியது அவசியம். இதன்படி, மாநில மாசு கட்டுப்பாட்டுவாரியங்கள் 202 பொது மருத்துவக் கழிவு சுத்திகரித்தல் மற்றும் அகற்றும் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.