சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,580 பேர் புதிதாக கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 185 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும  நேற்று ஒரே நாளில் 1,580 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,35,419 பேர் ஆக அதிகரித்துள்ளது.  நேற்று  மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  1,509 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,83,707 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா வார்டில் 16,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,46,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் சிகிச்சை பலனின்றி  உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,433 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 189 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,36,249 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: