சென்னை:  தமிழகத்தில்  நேற்று ஒரேநாளில் 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. சென்னையில் 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை தகவலின்படி  மாநிலம் முழுவதும் நேற்று   1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் இருவர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  25,84,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்ற 34 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,462 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் நேற்று  1,887 பேர் குணம் அடைந்து இதுவரை 25,30,096  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும்  20,411 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 2,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,  இதுவரை சென்னையில் 5,40,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  8,352 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 194 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,30,289 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: