டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 38,667- பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 480- பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 38,667- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,21,56,493 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  478- பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பு 4,30,732 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  தொற்று பாதிப்பில் இருந்து 35,743- பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,13,38,088 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,87,673- ஆக உள்ளது.

இந்தியாவில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 2.05 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53.61 கோடியாக உள்ளது.